/* */

துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குமரியில் துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை  கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

துண்டிக்கப்பட்ட சாலை.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் மெதுகும்மல் பஞ்சாயத்தில்- 1-ம் வார்டில் நெய்யார் இடதுகரை சானல் பாய்ந்து செல்கிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதில் அங்குள்ள இணைப்பு சாலையில் ஒருபுறம் தண்ணீர் அடித்து சென்றது.

இதனால் அந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சுமார் 60 அடி ஆழத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத சுழல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறைக்கும், சம்மந்தபட்ட அதிககாரிகளுக்கும் பல முறை மனுக்கள் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எட்டாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த ஆழமான பகுதியினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னாள் இதனை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  6. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  7. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்
  9. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  10. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை