/* */

கும்பப்பூ சாகுபடி தீவிரம்: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

குமரியில் கும்பப்பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகள், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கும்பப்பூ சாகுபடி தீவிரம்:  மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

பூதப்பாண்டி, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கும்பப்பூ சாகுபடிக்கான நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் விவசாயமாக நெல் விவசாயம் இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை 45 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற்ற நெல் விவசாயம், நாளடைவில் விவசாய பூமி வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டதால், இன்று ஆறாயிரம் ஹெக்டேராக குறைந்து போனது.

இந்நிலையில் கண்ணிப்பூ சாகுபடியின் அறுவடை பணிகள் நிறைவு பெற்றதால், கும்பப்பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திட்டுவிளை, பூதப்பாண்டி, தெரிசனன்கோப்பு, சுசீந்திரம், மருங்கூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கும்பப்பூ சாகுபடிக்கான நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையானது, கும்பப்பூ சாகுபடிக்கு கைகொடுப்பதோடு மழையால் அணைகளும் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 9 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?