/* */

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி

குமரியை சேர்ந்த 26 பேர் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

HIGHLIGHTS

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி
X

குமரி மாவட்டத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டர்களாக பணி ஆணை பெற்றவர்களுடன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பத்ரிநாராயணன்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆண்கள், 06 பெண்கள் என மொத்தம் 26 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பணி நியமன ஆணையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழங்கினார்.

முன்னதாக புதிய உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்த அவர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறி பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, காவல்துறை பணியில் நேர்மையுடனும், பொறுப்புடனும் தங்களது பணியினை திறம்பட செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Updated On: 23 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...