/* */

குமரியில் கடத்த முயன்ற 105 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

குமரியில் எல்லை சோதனைச்சாவடி வழியாக கடத்த முயன்ற 105 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் கடத்த முயன்ற 105 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
X

கஞ்சா கடத்தி கைதானவர்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லை சோதனைச் சாவடி வழியாக, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எல்லை சோதனை சாவடி வழியாக கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் குமரி -கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை பகுதியில். தனிப்பிரிவு போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அது வழியாக வேகமாக வந்த செகுசு காரை மடக்கி சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து எடைபோட்டு பார்த்தபோது, 105 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்ற 2- நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த நசீர் (52 ), இஞ்சிவிளையை சேர்ந்த சாதிக் அலி (39) என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த தனிப்டை போலீசார் குட்கா மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!