/* */

கேரளாவில் தனியார் பேருந்து வீட்டு சுவரில் மோதி விபத்து: 5 பேர் காயம்

கேரளாவில், கட்டுபாட்டை இழந்த தனியார் பேருந்து வீட்டில் மதில் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

கேரளாவில் தனியார் பேருந்து வீட்டு சுவரில் மோதி விபத்து: 5 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான பேருந்து. 

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பம்பாடு வழியாக வண்டூர் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, அதிவேகத்தில் வந்துள்ளது. வண்டுர், அம்பலப்படி அருகே வளைவான சாலை பகுதியில் வரும்போது , கட்டுபாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மதில் சுவரில் மோதியது.

விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் இடது பக்கத்தில் இருந்த 5 பயணிகள் படு காயம் அடைந்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள், படுகாயம் அடைந்த 5 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த மலப்புரம் போலீசார் பேருந்தின் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது