/* */

குமரியில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்வு

விஜயதாசமியை முன்னிட்டு, குமரியில் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல், இன்று விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமரியில் விமரிசையாக நடந்த வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்வு
X

வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தைக்கு எழுத்தறிவிக்கப்பட்டது.

நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று, விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புதிய செயல்களை தொடங்கினால் அது பலமடங்காக பெருகும் என்பது, காலம் காலமாக இருந்து வரும் ஐதீகமாக உள்ளது. அதன்படி விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினால் அந்த குழந்தைகள் கல்வி செல்வம் கொண்டவர்களாக வருவார்கள் என்பது நம்பிக்கை.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் பழைய அரண்மனையான பத்பநாபபுரம் அரண்மனையில் உள்ள கம்பர் புகழ் பாடிய தேவார கட்டு சரஸ்வதி அம்மன் கோவில், ஆதி பராசக்தி சித்தர் பீடம் கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், அரிசியில் 'அ' எனும் அகர ஓம்கார எழுத்தை எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கினர்.

Updated On: 15 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?