/* */

கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு குமரியில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி சுனாமி நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
X

கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ந் தேதி குமரி மாவட்ட கடலோர பகுதிகளை சுனாமி ஆழிப்பேரலை தாக்கியது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் நினைவாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுனாமி நினைவு ஸ்தூபியும், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுனாமியால் இறந்தவர்களுக்கு 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவு ஸ்தூபி பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நினைவு ஸ்தூபியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதே போன்று பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் சட்ட மன்ற உறுப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 26 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...