/* */

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
X

நாகர்கோவிலில் நீட் தேர்வு மையத்திற்குள் செல்லும் மாணவிகள்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 மையங்களில் 4,142 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 3,927 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் நாகர்கோவில், பார்வதிபுரம் உள்ளிட்ட 7 மையங்களிலும் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் உடல் வெப்ப நிலை உள்ளிட்ட கடும் சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே மாணவிகளுக்கு ஷால், கம்மல் செயின் போன்றவைகளை அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் தேர்வு மையம் வந்த மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தலைமுடியை பின்னக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது தேர்வு எழுதுவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கட்டுப்பாடுகளும் சோதனைகளும் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...