/* */

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிதி: குமரி அதிமுகவினர் கோரிக்கை

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அதிமுக கோரிக்கை.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிதி: குமரி அதிமுகவினர் கோரிக்கை
X

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த அதிதீவிர கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது.

பல்வேறு கிராமங்களில் மழை நீர் புகுந்ததால் உடைகள் உடைமைகள் அனைத்தையும் இழந்த பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதேபோன்று மாவட்டத்தில் 2800 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட நெல், வாழை, தென்னை, ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த அதிதீவிர கனமழையின் காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க குமரி மாவட்ட அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 24 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...