/* */

குமரியில் 34,422 பேருக்கு ரூ.139.63 கோடி நகை கடன் தள்ளுபடி

குமரியில் 127 கூட்டுறவு சங்கம் மூலம் பெற்ற 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் 34,422 பேருக்கு ரூ.139.63 கோடி நகை கடன் தள்ளுபடி
X

குமரியில் 34,422 பயனாளிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.

இதனிடையே நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக முதல்வர் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடியை பயனாளிகளுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் பொது நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 34,422 பயனாளிகளின் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வழங்கினார்.

அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த திட்டத்தின் படி மாவட்டத்தில் மொத்தம் 127 கூட்டுறவு சங்கம் மூலம் பெறப்பட்ட 139.63 கோடி ரூபாய் மதிப்பிலான நடை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 9 March 2022 1:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  5. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  6. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  7. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  8. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  9. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!