/* */

மது குடிக்காமல் தவித்து, மதுப்பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்-குமரி காவல்துறை

மதுவிற்கு மாற்றாக ஆல்கஹால் மருந்துகளை விற்க கட்டுப்பாடு - குமரி காவல்துறை

HIGHLIGHTS

மது குடிக்காமல் தவித்து, மதுப்பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்-குமரி காவல்துறை
X

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் குடிக்காமல் தவித்து வரும் நிலையில் மது பிரியர்கள் மாற்று வழியை தேடி செல்கின்றனர்.

அதன் படி மதுப்பிரியர்கள் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகள் கெட்டுப்போகமால் இருக்க ஆல்கஹால் சேர்ந்து இருக்கும் மருந்துகளையும், சேனிடேசர் போன்ற திரவங்களை பயன்படுத்தி வருவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்தது.

மது கிடைக்காமல் இது போன்ற திரவங்களை அருந்தி ஒரு சிலர் இறந்த காரணத்தினால் மருந்தகங்களில் இது போன்ற மருந்துகளை விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் இது போன்ற மருந்துகளை கேட்டு வருபவர்களுக்கு டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வினியோகம் செய்ய வேண்டும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் ஒவ்வொரு காவல் நிலைய எல்கைக்குள் இருக்கும் மருந்தக உரிமையாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 1 Jun 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...