/* */

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது

குமரியில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது
X

கனிமவளங்களை கடத்தி செல்லும் லாரி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிம வளங்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அனுமதி உள்ள வாகனங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள், இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது கனிம வளங்கள் கடத்தல், கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்காணிக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆனால் அதிகாரிகள் ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல், கண்காணிப்பு குழு அமைக்காமல் கனிம வளம் கடத்தலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தினமும் 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் அனுமதி இன்றி களியல் காவல் நிலையம் வழியாக நெட்டா சோதனை சாவடியை கடந்து கேரளாவிற்கு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Updated On: 28 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!