/* */

குமரியில்தொடரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்தது மழை வெள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை 300 க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன,

HIGHLIGHTS

குமரியில்தொடரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்தது மழை வெள்ளம்.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் பெய்து வரும் மிக கனமழை காரணமாக அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் வீடுகள் மற்றும் விலைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் தத்தளித்து வருகின்றன, இதனிடையே நாகர்கோவில் மாநகரத்திற்கு உட்பட்ட புத்தேரி, பறக்கின் கால்வாய் பகுதியில் உள்ள குளம் உடைந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறியதால் சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

யாஸ் புயல் கரையை கடந்தால் மழை தீரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.


Updated On: 27 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...