குமரியில் புதிய வடிவிலான சட்ட சேவை சிறப்பு முகாம் தொடக்கம்

குமரியில் புதிய வடிவிலான சட்ட சேவை சிறப்பு முகாம் தொடக்கம்
X

கன்னியாகுமரியில் சட்ட சேவை சிறப்பு முகாமை  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் புதிய வடிவிலான சட்ட சேவை சிறப்பு முகாமை உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய வடிவிலான சட்ட சேவை முகாமை உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.

மேலும் சட்ட விழிப்புணா்வு வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்று தங்களது துறையைச் சாா்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.

மேலும் சட்டம் சாா்ந்த மற்றும் சட்டம் சாராத பிற துறைகளின் மனுக்களையும் அந்தந்த துறை மூலம் முகாமிலேயே தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture