/* */

சாட்டை துரைமுருகனுக்கு அக். 25 வரை நீதிமன்றக்காவல்

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சாட்டை துரை முருகனுக்கு, அக்டோபர் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சாட்டை துரைமுருகனுக்கு அக். 25 வரை நீதிமன்றக்காவல்
X

 சாட்டை துரைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க அழைத்து சென்ற போலீசார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று மாலை தக்கலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும், யூ டியூப்பருமான சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்; பின்னர், பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை, வரும் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, சாட்டை துரைமுருகனை நாங்குநேரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

Updated On: 11 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு