/* */

ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி
X

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்திய அதிமுகவினர். 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஜெயலலிதா திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், தீப ஆராதனை காட்டியும் மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட ஏராளமான கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 5 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...