/* */

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள் கைது

குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள் கைது
X

விபத்து ஏற்பட்ட இடம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன்(40). இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் தேன்மொழி (13), மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் ஆலங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு வடித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜன் அனுமதி இன்றி தனது வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இன்று அதிகாலை திடீரென வெடித்தது, இதில் வர்ஷா உடல் சிதறி பலியானார்.

மேலும் ராஜனின் வீடும் இடிந்து விழுந்தது, இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த கல் விழுந்ததில் பார்வதியும் பலத்த காயம் அடைந்தார். இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ராஜனை போலீசார் கைது செய்தனர், இந்நிலையில் பட்டாசு தயாரிக்க வெடிமருந்து சப்ளே செய்த சகோதரிகளான ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்த ராமலெட்சுமி மற்றும் தங்கம் ஆகியோரை ராஜாக்கமங்களம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 75 கிலோ வெடிமருந்தையும் பறிமுதல் செய்தனர், மேலும் இவர்களுக்கு வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது, வேறு யாருக்கெல்லாம் வெடிமருந்து கொடுத்து உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!