/* */

குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்

தடுப்பூசி போட்டால் குலுக்கள் முறையில் தங்க நாணயம் பரிசு அளிக்கப்படும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

குமரியில் தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்று கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நடைபெற்ற 4 தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 306 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் மாவட்டத்தில் 66% பொதுமக்களே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 33% பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் மூலம் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என மாவட்டம் முழுவதும் 570 சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே தமிழகத்திலேயே ஒரு புதிய முயற்சியாக தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதில் 22 பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ள நிலையில் அதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Updated On: 9 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!