/* */

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை

மீன் வலை மற்றும் டொயினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று, குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மீன் வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மீனவர்கள் கோரிக்கை
X

கோப்பு படம் 

மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களின் ஜிஎஸ்டி வரி கூடிய நிலையில், அதனை குறைக்க தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைர் சேவியர் மனோகரன் கூறும் போது, மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பின் போது மீனவர்கள் பயன்படுத்தும் டொயினுக்கு18 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 15 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதித்தது. இது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வரிவிதிப்பாக உள்ளது என மீனவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், முந்தைய தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக டொயினுக்கு 12 சதவிகிதமும், மீன்பிடி வலைக்கு 5 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் வலைக்கான ஜிஎஸ்டி வரி 5 இல் இருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தற்போதைய தமிழக அரசு மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, வலைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!