/* */

விதிமீறிய வாகனங்கள் பறிமுதல் - வழக்குப்பதிவு -குமரி போலீஸ் அதிரடி

சட்டம் தன் கடமையைச் செய்யும்.

HIGHLIGHTS

விதிமீறிய வாகனங்கள் பறிமுதல் - வழக்குப்பதிவு -குமரி போலீஸ் அதிரடி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசின் உத்தரவு படி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளவும் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள், முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி இருப்போர், வாகனங்களில் வீதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாகன சோதனையின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்கள், முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி இருப்போர் வாகனங்களில் விதிமுறைகள் மீறிய குற்றங்கள் என அனைவரின் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இதில் கன்னியாகுமரி உட்கோட்டத்தில் 246 வழக்குகளும் நாகர்கோவில் உட்கோட்டத்தில் 231 வழக்குகளும் , குளச்சல் உட்கோட்டத்தில் 414 வழக்குகளும், தக்கலை உட்கோட்டத்தில் 605 வழக்குகளும் போடப்பட்டுள்ளது, மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஊரடங்கு நாட்கள் முழுவதும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

Updated On: 18 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை