/* */

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம்-

HIGHLIGHTS

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.
X

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் அஞ்சுகிராமம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் பால்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அவர்களை பிடித்த போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மணிகண்டன்(28), செல்வன்(45), வேலு(45), சேகர்(41) மற்றும் ராஜசேகர்(29) என்பது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக சூதாடிய அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சூதாடிய கார்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 14 May 2021 10:30 AM GMT

Related News