/* */

நாளை 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு

நாளை நாகர்கோவில் மாநகரத்தில் உள்ள 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாளை 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு
X

பைல் படம்

தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் வரும் 12 ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

அதன் படி மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன, அதன்படி மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் முகாம்கள் நடைபெறும் என அறிவித்த மாநகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

மாநகர மக்கள் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் வீடுகள் அருகிலேயே நடைபெறும் முகாமிற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 11 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி