/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 550 இடங்களில் தடுப்பூசி முகாம்

குமரியில் நாளை 550 தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சத்து 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 550 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் உத்தரவுப்படி சனிக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.

அதன்படி நாளை சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 550 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. இதற்காக ஒரு லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன, தடுப்பூசியை செலுத்தும் வகையில் 300 மருத்துவ பணியாளர்களும் தயார்நிலை படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பு ஊசி செலுத்துபவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 22 நபர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்