/* */

வரி வசூலுக்கு சிறப்பு மையம்: நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமை சிறப்பு வரி வசூல் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில், 2021-2022 நிதியாண்டுக்கான வரிவசூல் நடைபெற்று வருகின்றன. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மாநகராட்சி இயங்காத நிலையில், பலர் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/10/2021) பொதுமக்கள் தங்களின் சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை தொழில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக, காலை 9 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 16 Oct 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...