/* */

மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

குமரியில் பிரேக் பிடிக்காமல் மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரியால் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

HIGHLIGHTS

மின்கம்பம் மீது மோதிய டாரஸ் லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
X

நாகர்கோவிலில் பிரேக் பெயிலியர் லாரி மின் கம்பத்தில் மோதி நின்றது.

சென்னையில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு 22 டயர் கொண்ட லாரி நாகர்கோவில் வந்தது, நாகர்கோவில் மாநகரின் முக்கிய வர்த்தக பகுதியாகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் காணப்படும் கோட்டார் பகுதியில் லாரி வரும் போது லாரியின் பிரேக் செயல்பாட்டை இழந்துள்ளது.

இதனிடையே பிரேக் செயல்பாடு இல்லை என்பதை தெரிந்து சுதாரித்து கொண்டு லாரி ஓட்டுநர் லாரியை அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதவிட்டு நிறுத்தினார், இந்த விபத்தில் மின் கம்பம் சேதம் ஆன நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும் லாரியை மின்கம்பத்தின் மோத செய்யவில்லை என்றால் அங்கிருக்கும் கடைகள் அல்லது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்ற நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்