/* */

குமரியில் அதிமுகவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் ஆதரவு

குமரியில் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவு.

HIGHLIGHTS

குமரியில் அதிமுகவிற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் ஆதரவு
X

குமரியில் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்கி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது, தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மாநகராட்சி அந்தஸ்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 52 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் சங்கம் நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்கி உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் முழு ஆதரவிற்கான அதிகார பூர்வ கடிதம் அதிமுக வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

Updated On: 11 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  7. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  8. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  9. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்