குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு

குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு
X

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்யும் போக்குவரத்து போலீசார்.

நாகர்கோவில் முக்கிய பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த போலீசாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதி மாநகரின் மையப்பகுதியாகவும் 24 மணி நேர போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மிக முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது.

இந்த சாலை சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அறிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை கவனித்த போக்குவரத்து பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஸ்ரீதரன் ஆகியோர் சேர்ந்து குண்டும் குழியுமான சாலையை கல் மற்றும் மண்ணால் நிரப்பி சரி செய்தனர்.

இதனை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டியதோடு காவல்துறைக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture