/* */

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்

நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்
X

நாகர்கோவிலில் காய்ச்சல் பரிசோதனை முகாம் ( பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக குறைந்தது.

தற்போது உள்ள நிலவரப்படி குமரியில் 210 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இது வரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட வில்லை.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தேடி வரும் நிலையை மாற்றி மக்களை தேடி சென்று மாநகராட்சி நிர்வாகம் பரிசோதனை மேற்கொண்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

Updated On: 18 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...