/* */

25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளி

குமரியில் 25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளி
X

மரக்கிளையில் அமர்ந்துள்ள மனநோயாளி 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள நாவல் மரத்தில் சுமார் இருபத்தைந்து அடி உயரமான மரக்கிளையில் வட இந்தியாவை சேர்ந்த பெண் மனநோயாளி ஒருவர் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார்.

சாதாரண நபரால் எளிதில் ஏறி செல்ல முடியாத வகையில் காணப்படும் அந்த மரக்கிளை மீது ஒரு பெண்மணி எந்த சலனமும் இன்றி தூங்கிக் கொண்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பெண்மணி கீழே விழுந்து விடுவாரோ என அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கவலை கொண்ட நிலையில், அதனை பொருட்படுத்தாத மனநோயாளி தூக்கத்தில் இருந்து எழும்பி பரிகாசமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். இந்த காட்சி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது,

இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ரயில்வே போலீசார் பெண்மணியை கீழே இறங்கச் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

சமீப காலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வட இந்திய மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ரயில் பயணிகளுக்கு இடையூறாக மாறியுள்ளது.

Updated On: 14 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...