/* */

நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் மகேஷ் ஆய்வு

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரும் பணி தீவிரமாகி உள்ள நிலையில் அதனை மேயர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் மகேஷ் ஆய்வு
X

நாகர்கோவிலில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் ஓடை அடைபட்டு காணப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் மாநகர் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி ஆறு போல் காட்சியளித்த நிலையில் அதனை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகரில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் டெரிக் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அப்போது பணிகளை துரிதப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

Updated On: 18 April 2022 2:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...