/* */

உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் நிறைவு பெற்றது அதிமுகவின் விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து குமரியில் நடைபெற்று வந்த அதிமுகவின் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல்: குமரியில் நிறைவு பெற்றது அதிமுகவின் விருப்ப மனு
X

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வழங்கும் பணி கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விருப்பமனு வினியோகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கடைசி நாளான இன்று மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால் ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள், இளம் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது, சில நாட்களில் விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது