/* */

தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ் - குமரி எஸ்.பி எச்சரிக்கை

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் என குமரி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டாஸ்  - குமரி எஸ்.பி எச்சரிக்கை
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் ரூ 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை திறந்து வைத்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

குமரி மாவட்டம் முழுவதும் 5,324 சிசிடிவி கேமராக்கள், பொதுமக்கள் கூட்டம் கூடும் முக்கிய பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத சந்திப்புகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. அந்த சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்பட்டாலும் அதனை உடனே சரி செய்யும் வகையில் அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமும் தங்கள் வர்த்தக நிறுவனங்கள், வீடு, வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், எச்சரிக்கையையும் மீறி தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Updated On: 19 March 2022 10:00 AM GMT

Related News