/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

அரசு உத்தரவுப்படி பள்ளிகள் செப்டம்பர்1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் நிலையில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக அரசு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்வி நிலையங்களை திறக்க வழிமுறைகளை வெளியிட்டது.

தமிழக அரசின் உத்தரவின் படி வருகின்ற 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் செயல்பட உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

அதன் படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செடிகள் அகற்றப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி இந்த பணிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்