/* */

வீடு தேடி வரும் தடுப்பூசி வாகனம்: நாகர்கோவில் மாநகராட்சியில் துவக்கம்

நாகர்கோவிலில் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் முறையை தொடங்கியது மாநகராட்சி.

HIGHLIGHTS

வீடு தேடி வரும் தடுப்பூசி வாகனம்: நாகர்கோவில் மாநகராட்சியில் துவக்கம்
X

நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பெரும் தொற்றை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசியானது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டிய பொதுமக்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தற்போது குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு முழுமையாக நீங்கி 24 மணி நேரமும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளது.

ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதோடு தடுப்பூசியை போட மாட்டோம் என்ற நிலையில் இருந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன் படி நாகர்கோவில் பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பணியை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On: 7 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!