/* */

கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம்: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

நாகர்கோவில் மாநகரில் கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

கொசுப்புழு உற்பத்தி காரணிகள் தென்பட்டால் அபராதம்: மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
X

மாதிரி படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொடர் மழை காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சியில் 293 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர், ஒவ்வொருவரும் தினமும் 50 வீடுகளை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா? இல்லையா? என அறிக்கை கொடுக்க வேண்டும்.

மேலும் காலி மனைகள், புதிய வீடுகள் கட்டும் இடங்கள், வணிக நிறுவனங்களின் மொட்டை மாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி காரணிகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வீடுகளில் ஆய்வின்போது கொசு புழு உற்பத்தி இருக்குமானால் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் ஆணையர் ஆஷா அஜித்அறிவுறுத்தி உள்ளார்.

Updated On: 12 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’