Begin typing your search above and press return to search.
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு
குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் காவல் நிலையத்தை பார்வையிட்டார், தொடர்ந்து காவல் நிலைய அதிகாரிகள், ஆளினர்களின் குறைகள் மற்றும் பணிகளை கேட்டறிந்தார்.
அதன்பின் காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் காவலர்கள் தங்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.