/* */

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 ஆவது குடியரசு தின விழா கன்னியாகுமரியில் கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.

நாட்டின் 73- வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 273 பேருக்கு பாராட்டு சான்றிதல்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதோடு விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது