/* */

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்றின் வேகம் குறைந்து தற்போது மாவட்டத்தில் 532 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது, அதன்படி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்தல், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் என பல்வேறு மக்கள் நலப் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. மாநகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

Updated On: 1 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...