/* */

கொரோனா தனிநபர் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கொரோனா தனிநபர் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு வீடாக தனிநபர் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 18403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிலைய ஊழியர்கள், மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள், நாகர்கோவிலை சேர்ந்த மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. ஊழியர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷாவின் நேரடி மேற்பார்வையில் 52 வார்டுகளிலும் 308 கொசு ஒழிப்பு பணியாளர்கள் துணையுடன் சுகாதார அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக தனிநபர் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதோடு கபசுர குடிநீர் வினியோகத்தை துவக்கி உள்ளனர்.

Updated On: 19 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்