நாகர்கோவில் மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு

பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக, சுமார் இரண்டு வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
வகுப்பறைகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதோடு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu