/* */

கொரோனா நோயாளி வருகை: மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா நோயாளி வருகை: மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் கொரோனா பரிசோதனை கொடுத்துவிட்டு தனது அலுவலக பணி சம்பந்தமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வந்து சென்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதன்படி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Updated On: 26 April 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?