/* */

சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை -நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை -நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது குறைந்து வரும் நிலையில் நோய் தொற்று பரவல் இல்லாத மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் மாநகரம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணிகள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆரம்ப சுகாதார நிலையம் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வீதி வீதியாக சென்று நடைபாதை வியாபாரிகளுக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர். நோய் தொற்று இல்லா மாவட்டத்தை உருவாக்கும் வகையில் நடைபெறும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 2 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  8. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  9. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  10. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...