/* */

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குமரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது உள்ள நிலையில் 5803 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே குமரியில் நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் போலீசார், தீயணைப்புத் துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களும் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 9 வன ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வனத்துறை அலுவலகம் முழுவதையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 27 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...