/* */

யாசகம் பெறுவதில் மோதல்:கல்லால் தாக்க முயன்ற யாசகர்

குமரியில் யாசகம் பெறுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கல்லால் தாக்க முயன்ற யாசகரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

யாசகம் பெறுவதில் மோதல்:கல்லால் தாக்க முயன்ற யாசகர்
X

மோதலில் ஈடுபட்ட யாசகர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மையப்பகுதியில் செட்டிகுளம் சந்திப்பு அமைந்துள்ளது. செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் PWD சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் யாசகம் பெறுவோர் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபாதையில் யாசகர்கள் இருவர் ஒருவரை ஒருவரை கல்லால் தாக்கி கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினந்தோறும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், உதவியாக கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தி விட்டு நடைபாதையில் இருந்தவாறே தகாத வார்த்தைகளால் பேசுவதும், உடம்பில் அரைகுறை ஆடையுடன் நடைபாதையில் சுற்றித் திரிவதும் அவ்வபோது பாதசாரிகளை முகம் சுழிக்க வைக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கண்காணித்து யாசகம் பெறுவோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 2 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்