/* */

நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடி ஆய்வு
X

நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் ராமன்புதூர் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் இன்று கன்னியாகுமரிக்கு மாவட்டம் வந்தார். மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் வந்த முதல்வர் ஸ்டாலின் முதல் ஆய்வு பணியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பு முதல் ராமன்புதூர் செல்லும் சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சாலைகளை தரமாக போட வேண்டும் என காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவிட்டார், பழைய சாலைகளை முழுமையாக அப்புறப்படுத்தி புதிய சாலைகள் போட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை பணிகள் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் நடைபெற்று வரும் கட்டுமான மற்றும் பால பணிகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆட்சியர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!