/* */

தசை சிதைவு நோயினால் 8 வருடங்களாக முடங்கிய சகோதரர்கள்: அரசு உதவி செய்யுமா?

குமரியில் மரபியல் சார்ந்த தசை சிதைவு நோயினால் 8 வருடங்களாக முடங்கிய சகோதரர்கள் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தசை சிதைவு நோயினால் 8 வருடங்களாக முடங்கிய  சகோதரர்கள்: அரசு உதவி செய்யுமா?
X

நாகர்கோவில் அருகுவிளை பகுதியில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சகோதரர்கள் மூர்த்தி மற்றும் கிருஷ்ணன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணன், தம்பிகளான மூர்த்தி மற்றும் கிருஷ்ணன், இவர்கள் இருவரும் மஸ்குலர் டிஸ்ராபி என்ற மரபியல் சார்ந்த தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 8 வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

மற்ற இளைஞர்களை போல ஓட முடியா விட்டாலும் பரவா இல்லை ஆனால் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தவித்து வரும் இரு இளைஞர்களும், தங்களுடைய சுய தேவைகளான கழிவறைக்கு செல்லுதல் வீட்டிற்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல் என எந்த பணியையும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த இரு இளைஞர்களையும் அவர்களின் சகோதரியான முத்துலட்சுமி என்ற இளம்பெண்ணே கவனித்து வருகிறார், கடைகள் மற்றும் அலுவலகங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்றால் சமயத்திற்கு தம்பிகளை கவனிக்க முடியாது என்பதால் மாலை வரை வேலை செய்யும் அளவிற்கு எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தம்பிகளை கவனித்து வருகிறார்.

இதனிடையே முத்துலட்சுமி கூறும்போது கடவுள் புண்ணியத்தில் உணவிற்கும் பஞ்சம் இல்லை என்றாலும் எங்களது ஏழ்மை வறுமை போன்றவை தம்பிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டு இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது தம்பிகள் இருவரும் எழுந்து நடக்க வேண்டும் இதுவே என் ஆசை, எனது ஆசை மட்டும் அல்ல என் தம்பிகளின் ஆசையும் அதுதான் என கூறும் முத்து லெட்சுமி சரியான சிகிச்சை அளித்தால் தனது தம்பிகள் இருவரும் எழுந்து நடப்பார்கள் என்றும் இதற்கு தமிழக அரசு தயவுகூர்ந்து மருத்துவ உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 3 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?