/* */

பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அரசு வாகன ஓட்டுநர்கள், பணி நிமித்தம் காரணமாக இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

HIGHLIGHTS

பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்
X

 நாகர்கோவிலில், அரசு வாகனங்களுக்கு இன்று ஆயுத பூஜை போடப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழாவின் கடைசி நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. அதே நேரம், பணி நிமித்தம் காரணமாக நேற்று ஆயுத பூஜையை கொண்டாடாத, மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு வாகன ஓட்டுநர்கள் இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் வாகனங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வாகனங்களுக்கு மாலைகள் அணிவித்த ஓட்டுநர்கள் தீப ஆராதனை காட்டி வணங்கினர்.

Updated On: 15 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!