/* */

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 85 லட்சம் பறிமுதல்

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 85 லட்சம் பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கல்வி அலுவலகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீடு, நீதிமன்ற சாலை அமைந்திருக்கும் முக்கிய பகுதியான ஜெகநாதன் தெருவில் அமெரிக்காவில் பணியாற்றும் பொறியாளர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

சமீபத்தில் இவரது மகள்களுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அவரது வீட்டினுள் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,

சோதனையின்போது ராஜேஷ் வீட்டில் இருந்து கணக்கில் வராத 85 இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண செலவு, ஆடம்பர செலவு உள்ளிட்டவற்றை ரகசியமாக கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டததாகவும் தொடர்ந்து ராஜேஷ்க்கு நெருக்கமானவர்கள் குறித்த தகவல்களை திரட்டி உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கும் சோதனையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 30 March 2021 3:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது