/* */

தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா

தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புதிய திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய அளவில் புகழ் பெற்ற மலர் சந்தை அமைந்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிராமத்தை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு திருமண மண்டபம் அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 2 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன்படி திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இந்நிலையில் திருமண மண்டபத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.இதனிடையே தங்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ள நிலையில் மின்னொளியில் ஜொலித்த திருமண மண்டபத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

ஒரு திருமணம் அல்லது ஏதாவது விசேஷங்கள் நடத்த வேண்டும் என்றால் மாநகர பகுதியை நாடி செல்ல வேண்டும் என்ற நிலை மாறி இப்போது குறைந்த வாடகையில் தங்கள் பகுதியில் திருமண மண்டபம் அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Updated On: 16 Feb 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்