நாகர்கோவில் நாகராஜாகோவில் தை தேரோட்டம்

நாகர்கோவில் நாகராஜாகோவில் தை தேரோட்டம்
X

நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தைத் தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் தைப்பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஜன.28) நடைபெற்றது. இதில் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மக்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பிற்பகலில் நிலையை அடைந்தது.

Tags

Next Story
ai in future agriculture